Breaking News

தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் வக்கீல் அருணாதேவி ரமேஷ்பாண்டியன்!!

  • Share on

நீதிக்கான அர்ப்பணிப்புடன் சட்டத் துறையில் களம் இறங்கிய வக்கீல் அருணாதேவி ரமேஷ்பாண்டியன், சமீபத்தில் தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சிலின் உயர்நிலை நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சிலின் துணைத் தலைவர் கார்த்திகேயன் மற்றும் முன்னாள் தலைவர் பால் கனகராஜ் ஆகியோரை அவர் நேரில் சந்தித்து, பொன்னாடை போர்த்தி வழக்கறிஞராக தன்னை பதிவு செய்ததையடுத்து அவர்களிடமிருந்து வாழ்த்துகளைப் பெற்றார். இந்நிகழ்வில் மக்கள் நல உரிமை அமைப்பின் சார்பில் அருணாதேவிக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டும் நிகழ்வும் நடைபெற்றது.

நீதியையும் சமூக நலனையும் இணைக்கும் பணியில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ள வக்கீல் அருணாதேவி, மகளிர் உரிமைகள், சட்ட விழிப்புணர்வு மற்றும் பொதுநல வழக்குகளில் ஆர்வத்துடன் செயலாற்ற தீர்மானித்துள்ளார். “நீதிமன்றம் என்பது மக்களின் நம்பிக்கையின் கடைசி கோட்டை — அதில் நீதியை நிலைநிறுத்துவதே எனது குறிக்கோள்,” என அவர் தெரிவித்தார்.

அவரது புதிய சட்டப் பயணத்துக்கு சட்டத் துறையினரும், சமூக ஆர்வலர்களும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.


  • Share on

கரூர் பேரதிர்ச்சியில் உயிரிழந்தோருக்கு புரட்சி பாரதம் தலைவர் பூவை. ஜெகன் மூர்த்தியார் அஞ்சலி!!

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்த துரை வைகோ – முன்னாள் ராணுவ வீரர்களுக்காக நினைவு ஆலயம் அமைக்க பரிந்துரை!!

  • Share on

Trending News