Breaking News

கரூர் பேரதிர்ச்சியில் உயிரிழந்தோருக்கு புரட்சி பாரதம் தலைவர் பூவை. ஜெகன் மூர்த்தியார் அஞ்சலி!!

  • Share on

கரூர் மாவட்டத்தில் நேற்று (27.09.2025) நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட பலர் படுகாயமடைந்ததும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பேரதிர்ச்சியான செய்தியை அறிந்து, புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான பட்டியல் இன பாதுகாவலர், இளம்புரட்சியாளர் டாக்டர் பூவை எம். ஜெகன் மூர்த்தியார் அவர்கள் இன்று (28.09.2025) கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, உயிரிழந்தோரின் உடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

மேலும், அவர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் நேரில் சென்று ஆறுதல் கூறி, சிகிச்சை பெற்று வரும் உறவுகளின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். காயமடைந்தோர் விரைவில் நலம் பெற வேண்டும் என்றும், இந்த துயரம் குடும்பங்களின் மனத்தில் ஆழமான புண்பாடு ஏற்படுத்தியுள்ளதால் அரசு உடனடியாக முழுமையான நிவாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


  • Share on

கரூரில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்திய இபிஎஸ் – ‘‘விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்துள்ளோம்… குற்றம் சொல்ல விருப்பமில்லை’’

தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் வக்கீல் அருணாதேவி ரமேஷ்பாண்டியன்!!

  • Share on

Trending News