Breaking News

இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி - அமமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள அழைப்பு!!

  • Share on

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரமலான் இதார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னையில் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறுகிறது.

அனைவரிடத்திலும் அன்பு செலுத்தி, தன்னால் இயன்றதை பிறருக்கு தர்மம் செய்து சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளைப் பின்பற்றி ஆன்மீக சிந்தனை, தொழுகை, ஏழைகளுக்கு உதவுவது, போன்ற நல்ல செயல்களுக்கு வழிவகுக்கும் வகையில் இஸ்லாமிய பெருமக்களால் கடைபிடிக்கப்படும் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கழகப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் வரும் (26.3.20205) புதன்கிழமை அன்று மாலை 4 மணி அளவில் சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், தமிழக முழுவதும் உள்ள கழக சிறுபான்மையினர் நலப் பிரிவின் நிர்வாகிகள், மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, வட்ட, கிளைக் கழகம், மற்றும் அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், இஸ்லாமிய சகோதரர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது .


  • Share on

மீனவர்கள் கைது...., மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!!

ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டி தேர்வு பயிற்சி மையம் அமைக்க எம்எல்ஏ சண்முகையா கோரிக்கை!!

  • Share on