கோவில்பட்டியில் சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் சார்பில் 7வது ஆண்டு தென் மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் யோகா போட்டி கொண்டாடப்பட்டது.

போட்டி நிகழ்ச்சிக்கு உதவி பேராசிரியர் மகாராஜன் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் உமா சங்கர் முன்னிலை வகித்தார்.
அதேபோல், கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் அருள்குமார், கயத்தார் பரணி இன் போடெக் கன்ஸ்ட்ரக்ஷன் வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன் போட்டியில்ச் சிறப்பாக விளங்கிய சிலம்பம் மற்றும் யோகா கலைஞர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். பின்னர் பேசிய அவர், “உடல்நலம் என்பது மனிதனின் முதல் செல்வம். சிலம்பம் உடல் வலிமையை அதிகரிக்கிறது; யோகா மன அமைதியையும் உள்ளத்தின் பலத்தையும் அளிக்கிறது. இக்கலைகளை சிறு வயதிலிருந்தே கற்றால் ஆரோக்கியமான, நீண்டகால வாழ்வு மனிதனுக்கு உறுதி” என கூறினார்.

இந்நிகழ்ச்சியை சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் முருகன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.