தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு சோட்டையன் தோப்பு, பூப்பாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

இந்நிலையைக் கவனத்தில் கொண்டு, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு எம்.சி. சண்முகையா அவர்கள் இன்று நேரில் சென்று நிலைமை ஆய்வு மேற்கொண்டார்.

மழைநீரை வெளியேற்ற மின் மோட்டார் மூலம் நடைபெற்று வரும் பணிகளை அவர் பார்வையிட்டு, அவற்றை மேலும் துரிதப்படுத்த தேவையான உத்தரவுகளை வழங்கினார். மேலும், அதிகமாக நீர் தேங்கிய பகுதிகளில் இருந்து விரைவாக மழைநீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் சார்ந்த அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

அவருடன் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. ஐகோர்ட் ராஜா, மாவட்ட சுற்றுச்சூழணி அமைப்பாளர் திரு. பொன்பாண்டி ரவி, ஒன்றிய துணைச் செயலாளர் திரு. எஸ்.ஆர். கணேசன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் திரு. ப்ளோமின்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திரு. ஸ்டாலின் உள்ளிட்டோர் உடன் கலந்து கொண்டனர்.