உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மீனவரணி சார்பில் படகு போட்டி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

சில தினங்களுக்கு முன்பு முத்துநகர் பீச்சில் நடைபெற்ற படகு போட்டி உற்சாகம் மிக்கதாக அமைய, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்கள் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாநில துணைச் செயலாளர் புளோரன்ஸ், ரெக்ஸ்லின், பிரையன்ட் நகர் செயலாளர் ராமகிருஷ்ணன், திரேஸ்புரம் செயலாளர் நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்தனர். மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல் நன்றியை தெரிவித்தார்.

இதையடுத்து இன்று மாலை (21.11.2025) அல்பர்ட் & கோ மஹால் காம்ப்ளெக்ஸில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் தலைமை வகித்து பல்வேறு நலத்திட்ட உதவிகள், பரிசுகள் ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட மற்றும் நகர மீனவரணி நிர்வாகிகள் அந்தோணி ஸ்டாலின், ராபர்ட், ரெக்ஸ்லின், ஸ்மைலன், ஜே. அந்தோணி ராஜ், அந்தோணி ராஜ், சேசையா, மாதவடியான், பெப்பின்காகு, ரமேஷ், குமார், நேவிஸ், ஜெனிபர், நீக்குலாஸ், ராஜா, ஜாண்சன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.
மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநில துணைச் செயலாளர் புளோரன்ஸ் ஆகியோரும் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினர்.

அதேபோல், துணை மேயர் ஜெனிட்டா, பிரையன்ட் திமுக பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், எஸ்.பி. கனகராஜ், அனந்தையா, மீனாட்சி சுந்தரம், செல்வகுமார், சுந்தரவேல், சேர்மபாண்டியன், முருகேசன், ஏசுவடியான், நாராயணன், மரைக்காயர், சுரேஷ், ராஜ்குமார், மேலும் திரேஸ்புரம் & பிரையன்ட் நகர் மீனவரணி நிர்வாகிகள் இலையன்ஸ், மரியசிலுவை, ஸ்டாரவின், ரீச்சர்ட், ரொபிட்டன், குட்வின் மில்டன், நிஷா, பிரமிலஸ், ஷேக் முகமது, ரமேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இறுதியில் மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மீனவரணி சிறப்பாக மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.