தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தலில் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டி.எஸ்.எப். அணி சார்பில் தீவிர ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்,
“ஒருதலைப்பட்சமாக செயல்படும் நீதிபதி ஜோதிமணியே வெளியேறு!”
“நீதியரசருக்கு இது ஒத்துவருமா?”
“வெளியேறு, வெளிமேறு… தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தை விட்டு வெளியேறு!”
“தமிழக அரசே! நீதி செய்… நீதி செய்!”
என முழக்கங்களை எழுப்பி ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டனர்.
இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் சில நிமிடங்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பகுதியில் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு காரணங்களால் அங்கு பலத்த போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆர்பாட்டத்தில் டி.எஸ்.எப் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலில் நீதிபதி ஜோதிமணிக்கு எதிராக டி.எஸ்.எப். அணியினர் ஆர்ப்பாட்டம் – ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஏ.எம்.எம். சின்னமணி நாடார் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னெடுத்த விழிப்புணர்வு பேரணி!!
அடுத்த
அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் தூத்துக்குடியில் உலக மீனவர் தின படகு போட்டி & நலத்திட்ட உதவி விழா சிறப்பாக நிறைவு!!
இதையும் படிக்கலாம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026