தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தலில் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டி.எஸ்.எப். அணி சார்பில் தீவிர ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்,

“ஒருதலைப்பட்சமாக செயல்படும் நீதிபதி ஜோதிமணியே வெளியேறு!”

“நீதியரசருக்கு இது ஒத்துவருமா?”

“வெளியேறு, வெளிமேறு… தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தை விட்டு வெளியேறு!”

“தமிழக அரசே! நீதி செய்… நீதி செய்!”

என முழக்கங்களை எழுப்பி ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டனர்.

இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் சில நிமிடங்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பகுதியில் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு காரணங்களால் அங்கு பலத்த போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆர்பாட்டத்தில் டி.எஸ்.எப் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.