தூத்துக்குடி ஏ.எம்.எம். சின்னமணி நாடார் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி 21.11.2025 அன்று நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் துவங்கிய இந்த பேரணியில் மாணவ–மாணவியர் சுற்றுச்சூழல் பாதுகாப்பை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வாசகங்கள் இடப்பட்ட பதாகைகளைத் தாங்கி முழக்கமிட்டு பங்கேற்றனர்.

பேரணி கணேசன் நகர் மற்றும் பத்திநாதபுரம் பகுதிகளில் வழம்வந்து, அங்கேயுள்ள பொதுமக்களுக்கு தூய்மை, மரநடுகை, பிளாஸ்டிக் குறைப்பு தேவைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை மாணவர்கள் மூலம் சமூகத்துக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணியில் ஆசியர்கள் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.