தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று பல்வேறு ஊரக மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டதுடன், குடிநீர் வசதி தொடர்பான ஆய்வும் நடைபெற்றது.

சூரங்குடி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் ஒரடுக்கு கற்சாலை அமைக்கும் பணிக்கு G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து எம்.குமாரசக்கனாபுரம் கிராமத்தில் ரூ.19.39 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளையும் துவக்கினார்.

பின்னர் வைப்பார் கிராமத்தில் 363 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்டம் செயல்படும் நிலையை ஆய்வு செய்து, குடிநீர் வழங்கல் தொடர்பான அடிப்படை தேவைகள் குறித்து பொதுமக்களிடம் நேரடியாக கேட்டறிந்தார்.

நிகழ்வுகளில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், தங்கவேல், ஒன்றிய செயலாளர்கள் இமானுவேல், சின்னமாரிமுத்து, அன்புராஜன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், மாவட்ட பிரதிநிதிகள் செந்தூர்பாண்டி, ராமலிங்கம், ஒன்றிய பொருளாளர் முனியசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் ராஜபாண்டி, ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் பரமசிவ பாண்டியன், நல்லமுகமது, ஜவஹர், மாரியப்பன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள், கிளைச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.