தூத்துக்குடி மாநகர மக்களுக்காக பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், ரோட்டரி கிளப் ஆப் தூத்துக்குடி ட்ரையல் பிளேசர்ஸ் சார்பில் துணி பைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மேயர் ஜெகன் பெரியசாமியை கிளப் நிர்வாகிகள் சந்தித்து துணி பைகள் வழங்கினர். இதையடுத்து மேயர், மாநகர மக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து துணி பைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

நிகழ்வில் துணை மேயர் ஜெனிட்டா, கிளப் தலைவர் ஆயிஷா பிரவீன், பட்டயத் தலைவர் மருத்துவர் புளோரா, திட்டமிடல் குழு தலைவர் வழக்கறிஞர் சொர்ணலதா, ரோட்டரி மாவட்ட ஆளுநர் மலர்விழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து, தூத்துக்குடி நகரத்தை பிளாஸ்டிக் மாசில்லா நகரமாக மாற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவதாக தெரிவித்தனர்.