தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிளையூரணி ஊராட்சி பகுதிகளில் — மாதாநகர், பாலதண்டாயுத நகர், மேல அழகாபுரி, கீழ அழகாபுரி, தாளமுத்து நகர், ஜாகிர் உசேன் நகர், கீதா ஜீவன் நகர் மற்றும் ராஜபாளையம் — மக்களுக்காக “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாம் தாளமுத்து நகர் R.C. நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இம்முகாமில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு அரசு சேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் முகாமில் மனு வழங்கிய மனுதாரர்களுக்கு மின்சார வாரியம் மற்றும் பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான பெயர் திருத்த ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் வட்டாச்சியர்கள் திரு. திருமேனி ஸ்டாலின், முருகேஸ்வரி, பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.