தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட எஸ்.கே.எஸ்.ஆர் காலனி பகுதியில் புதிய விளையாட்டுத் திடலுடன் கூடிய பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளின் முன்னேற்றம், வசதிகள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான அம்சங்கள் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.

இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப மற்றும் பகுதி கழக செயலாளர், மண்டல தலைவர் தொ.நிர்மல் ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் விளையாட்டு மற்றும் ஓய்வு நேர வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மேயர் தெரிவித்துள்ளார்.