தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நாளை (10.12.2025) புதன்கிழமையன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மாவட்டத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் வழக்கமான முறையில் நடைபெறும் இந்த பொதுமக்கள் மனு கேட்பு கூட்டம், நாளையும் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ளதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

காவல் நிலையங்களில் வழங்கிய மனுக்களுக்கு போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று நினைப்பவர்கள், அல்லது மூன்று மாதங்களாக தீர்வு கிடைக்காத புகார்கள் உள்ளவர்கள், இக்கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.