திருச்செந்தூர் கும்பாபிஷேகம், கந்தசஷ்டி மற்றும் குலசேகரன்பட்டினம் தசரா போன்ற பெரும் திருவிழாக்கள் இந்த ஆண்டு எந்தவித இடையூறும் இன்றி அமைதியான முறையில் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த வெற்றிக்குப் பின்னால் தவறாது கண்காணித்து பாதுகாப்பு வழங்கிய திருச்செந்தூர் உட்கோட்ட காவல்துறையினரின் அர்ப்பணிப்பே முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த அர்ப்பணிப்பை சிறப்பிக்கும் வகையில் இன்று (09.12.2025) திருச்செந்தூர் உதயம் இன்டர்நேஷனல் மஹாலில் நடைபெற்ற பாராட்டு விழாவில், திருவிழாக்களில் சிறப்பாக பணியாற்றிய உட்கோட்ட காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அமைதியை காக்கும் மௌன வீரர்களுக்கு வழங்கப்பட்ட இந்த பாராட்டு, காவல்துறையின் அர்ப்பணிப்புக்கு சமூகத்தின் நன்றியை எடுத்துக்காட்டுவதாகும்.
தூத்துக்குடி
திருவிழாக்களின் வெற்றிக்கு பின்னால் — காவல்துறையின் கண்காணாத காவல்! திருச்செந்தூர் உட்கோட்ட காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதன்கிழமை மக்கள் நாள்: உங்கள் புகாருக்கு நீதியை கேட்கும் வாய்ப்பு!
அடுத்த
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் சூரங்குடியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாதாந்திர ஆய்வுக்கூட்டம்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026