தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் – சூரங்குடியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை களப்பணியாளர்களுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V. மார்கண்டேயன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவி உபகரணங்கள், அடையாள அட்டைகள், உதவித்தொகை வழங்கும் நிலைமை குறித்து கேட்டறிந்து நேரடி ஆய்வு செய்தார்.

கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், முக்கிய நிபுணர் ஜென்சி ஜோசப், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி செந்தூர்பாண்டி, வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராமசுப்பிரமணியன், கிளைச் செயலாளர் சந்திரசேகர், சரவணன், சடையாண்டி, சுந்தர், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.