கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் குரு வெங்கட்ராஜ் மேற்பார்வையில், கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பிரேமா தலைமையிலான குழு இன்று (09.12.2025) ரோந்து பணியில் இருந்தது.
அப்போது திருநெல்வேலி – மதுரை தேசிய நெடுஞ்சாலை, ஆவல்நத்தம் விலக்கு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கோவில்பட்டி பாரதிநகரை சேர்ந்த மாடசாமி (எ) ராதாகிருஷ்ணன் மகன் திலீபன் (எ) மனோகர் (26) என்று தெரியவந்தது. மேலும் அவர் விற்பனைக்காக 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் உறுதி செய்யப்பட்டது.
போலீசார் திலீபனை கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி
“தேசிய நெடுஞ்சாலையில் ‘கஞ்சா’ ரைடு – கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு வேகப்பிடியில் எதிரி சிக்கினார்!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் சூரங்குடியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாதாந்திர ஆய்வுக்கூட்டம்!!
அடுத்த
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ – ஓட்டப்பிடாரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026