தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் அவைத்தலைவர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள், “தமிழக முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. வழிகாட்டுதலில் அனைவரும் இணைந்து அரசின் நோக்கங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்” என தெரிவித்தார்.
அவர் மேலும் தொடர்ந்தபோது, “முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதேபோன்ற பிரச்சினைகள் குறித்து பீகாரிலும் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் கூறினார். இந்நிலையில் தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் தேர்தல் ஆணையத்தின் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன. இதற்கு எதிராக முதலமைச்சர் எடுக்கும் எந்த போராட்டத்தையும் திமுக வீரர்கள் ஒற்றுமையுடன் முன்னெடுக்க வேண்டும்” எனக் கூறினார்.
மேலும் அவர், “ஏற்கனவே 100 வாக்காளர்களுக்கு ஒருவரை பொறுப்பாக நியமித்துள்ளோம். அவர்கள் காலை, மாலை என இரு வேளைகளிலும் முழுமையாக பணியாற்றி 10ம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் நிறைவேற்ற வேண்டும். நம் மீதுள்ள தலைமை நம்பிக்கைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தளபதியாரை முதலமைச்சராக்க சபதம் எடுக்க வேண்டும்” என உறுதியளித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜெயக்குமார் ரூபன், ஜெபத்தங்கம் பிரேமா, ஆறுமுகபெருமாள், மாநில மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளர் ஜெஸ்சி பொன்ராணி, ஸ்ரீவைகுண்டம் தொகுதி பார்வையாளர் சுரேஷ், ஓட்டப்பிடாரம் தொகுதி பார்வையாளர் பெருநாழி போஸ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, பிரம்மசக்தி, வழக்கறிஞர் மனோஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இத்துடன் மாவட்ட மற்றும் நகர திமுக அணிகளின் பல்வேறு பொறுப்பாளர்கள், கிளை செயலாளர்கள், இளைஞர், மகளிர், மாணவர், வழக்கறிஞர் அணியினர் பெருமளவில் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டத்தை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
முதல்வர் உத்தரவுகளை துணை முதல்வர் உதயநிதி, கனிமொழி எம்.பி வழியில் ஒன்றுபட்டு நிறைவேற்றுவோம் — அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பூத் நிர்வாகிகள் மாநாட்டில் உற்சாகம் – பாஜக நிர்வாகிகள் ஒன்று கூடினர்!
அடுத்த
ஏரல் கணேசபுரம் பகுதியில் சாதி சான்றிதழ் சிக்கலால் இளைஞர்கள் கல்வி இழப்பில் – அதிகாரிகளிடம் மனு கொடுக்க முடிவு!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026