தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஸ்ரீவைகுண்டம் வ.உ.சி மைதானத்தில் பூத் நிர்வாகிகள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மேலும், தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாராஜன், முன்னாள் ஓபிசி மாநில துணைத்தலைவர் விவேகம் ரமேஷ், மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ், ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜாகண்ணன், முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் மாவட்ட துணைத்தலைவர்கள், செயலாளர்கள், மண்டல தலைவர்கள், அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள் பலரும் பங்கேற்று, கட்சியின் வளர்ச்சி மற்றும் வலிமையைப் பற்றிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

இந்த மாநாடு பாஜக நிர்வாகிகளிடையே ஒற்றுமையும் உற்சாகமும் வளர்த்ததுடன், வரவிருக்கும் தேர்தலுக்கான கட்சித் திட்டங்கள் குறித்தும் முக்கியமான ஆலோசனைகள் நடைபெற்றன.