தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மீன்வளம் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோரது ஆணை மற்றும் ஆலோசனையின் பேரில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களைஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாப்பிளையூரணி பகுதிகள் – பாகங்கள் 108,109,110,111 & 118,119,120,121

காமராஜர் மேல்நிலைப்பள்ளி மற்றும் RC தொடக்கப்பள்ளிகளில் நடைபெறும் முகாம்களை MLA சண்முகையா அவர்கள் பார்வையிட்டார்.

வாக்காளர்களின் கணக்கீட்டு படிவங்கள் முறையாக நிரப்பப்படுகிறதா என்பதை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், முகவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி அன்னை இந்திரா நகர் – பாகங்கள் 90,91,92,93,94

அழகர் CBSE பள்ளியில் நடைபெற்ற திருத்த முகாமில் MLA நேரில் ஆய்வு.

மக்கள் விண்ணப்பிக்கும் படிவங்களின் துல்லியத்தைக் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் பெற்றார்.

கழக நிர்வாகிகள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மாநகராட்சி ஸ்பிக் நகர் – பாகங்கள் 261,262,263,264,265,266

M. சவேரியார்புரம் அந்தோனியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் முகாமை MLA பார்வையிட்டார்.

வாக்காளர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்தார்.

சம்பந்தப்பட்ட அலுவலர்கள், முகவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அனைத்து தகுதியான வாக்காளர்களும் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முகாம்கள் துல்லியமாக நடைபெற MLA சண்முகையா அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு செய்து வருகிறார்.