தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் – வேம்பார் செல்லும் சாலையில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடுமையாக காயமடைந்தார். அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் வழியாக சென்ற விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் விபத்து நிகழ்ந்ததை கண்டு உடனடியாக வாகனத்தை நிறுத்தி, மனிதநேய மனப்பான்மையுடன் காயமடைந்த நபரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் அவர், மருத்துவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு மாரியப்பனுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து தேவையான அனைத்து உதவிகளும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஜி.வி. மார்கண்டேயனின் இந்த தன்னலமற்ற செயல் பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.