தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் – வேம்பார் செல்லும் சாலையில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடுமையாக காயமடைந்தார். அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் வழியாக சென்ற விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் விபத்து நிகழ்ந்ததை கண்டு உடனடியாக வாகனத்தை நிறுத்தி, மனிதநேய மனப்பான்மையுடன் காயமடைந்த நபரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் அவர், மருத்துவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு மாரியப்பனுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து தேவையான அனைத்து உதவிகளும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஜி.வி. மார்கண்டேயனின் இந்த தன்னலமற்ற செயல் பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.
தூத்துக்குடி
விளாத்திகுளம் எம்எல்ஏ ஜி.வி. மார்கண்டேயன் மனிதநேயச் செயல்: சாலை விபத்தில் சிக்கிய நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி உதவி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு விறுவிறுப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் – டிஐஜி சந்தோஷ் ஹடிமணி நேரில் ஆய்வு!!
அடுத்த
நேர்மையே நம் நம்பிக்கை - தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதிமொழி!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026