மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது ஆணைப்படியும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோரது ஆலோசனையின்பேரிலும், ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
இதன் பகுதியாக,
1. முடிவைத்தானேந்தல் பாகம் எண் 215, 216, 217 — முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில்
2. எல்லைநாயக்கன்பட்டி பாகம் எண் 177 — ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்கள் நடைபெற்று வந்தன.
இந்த முகாம்களை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா நேரில் சென்று பார்வையிட்டு, வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் கணக்கீட்டு படிவங்கள் முழுமையாகவும் சரியாகவும் நிரப்பப்படுகிறதா என்பதை தொடர்புடைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
முகாமில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முகாமின் பணிகள் தடையின்றி நடைபெற உதவினர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரத்தில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்: முகாம்களை நேரில் பார்வையிட்ட எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“தூத்துக்குடிக்கு குடிநீர் தந்த நன்னீர்த் தந்தை குரூஸ் பர்னாந்துக்கு காங்கிரஸின் மரியாதை”
அடுத்த
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் அதிரடி படகு போட்டி: அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து தொடக்கம்!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026