மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது ஆணைப்படியும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோரது ஆலோசனையின்பேரிலும், ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இதன் பகுதியாக,

1. முடிவைத்தானேந்தல் பாகம் எண் 215, 216, 217 — முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில்

2. எல்லைநாயக்கன்பட்டி பாகம் எண் 177 — ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்கள் நடைபெற்று வந்தன.

இந்த முகாம்களை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா நேரில் சென்று பார்வையிட்டு, வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் கணக்கீட்டு படிவங்கள் முழுமையாகவும் சரியாகவும் நிரப்பப்படுகிறதா என்பதை தொடர்புடைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

முகாமில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முகாமின் பணிகள் தடையின்றி நடைபெற உதவினர்.