உலக மீனவர் தினத்தையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மீனவரணி சார்பில் முத்துநகர் கடற்கரையில் மாபெரும் படகு போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இன்று காலை தொடங்கிய இந்த விழாவிற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான பி. கீதாஜீவன் தலைமையேற்று படகு போட்டியை கொடி ஏற்றி தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தமிழ்நாடு மீனவர் நலவாரியம் உறுப்பினர் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், தமிழ்நாடு திமுக மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ் உள்ளிட்ட மாநில, மாவட்ட, மாநகர், வட்ட, பகுதி கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி பொறுப்பாளர்கள், சமூக அமைப்பாளர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான கலைஞரின் உடன்பிறப்புகள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து வரும் (21.11.2025) அன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் சிறப்பாக நடைபெற இருப்பதாக நிகழ்வாய்வாளர்கள் தெரிவித்தனர்.