தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் வழங்கிய பெரும் தொண்டன் ஐயா ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. முதலில் குரூஸ் பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் ஐசன் சில்வா, செந்தூர் பாண்டி, சேகர், எஸ்/சி பிரிவு மாவட்ட தலைவர் பிரபாகரன், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், விவசாய பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், ஊடகப்பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேபோல் மாவட்ட துணைத் தலைவர்கள் ரஞ்சிதம் ஜெபராஜ், அருணாசலம், மாவட்ட பொதுச் செயலாளர் மைக்கில் பிரபாகர், மாவட்டச் செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, அந்தோணி ஜெயராஜ், வார்டு தலைவர்கள் சித்திரை பால்ராஜ், வில்சன், சரவணன், சிவன் யாதவ், ரெனிஷ் பாபு, சுப்பிரமணியன், ராஜரத்தினம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.