வரும் 12.12.2025 அன்று தூத்துக்குடி VOC அரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சார்பில் 12-வது தமிழ்நாடு மாநில மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநில மாநாட்டில் இரண்டாம் புரட்சியாளர், எழுச்சித் தமிழர் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

தலைவர் திரு. திருமாவளவன் அவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரில் விடுதலைச் சிறுத்தைகள் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கத் தயாராக உள்ளனர். மாநாடு வெற்றியடைய அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செந்தூர். அர்ஜுன்,
வழக்கறிஞர்,
மண்டல துணைச் செயலாளர்,
தூத்துக்குடி,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.