தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளன. இதில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாகக் காணப்பட்ட எட்டையாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் மழைநீர் வெளியேற்றப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இப்பகுதியில் வழிகால்கள் மூலமாகவும் மின் மோட்டார் உதவியாலும் நீர் வெளியேறி வருவதை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைநீர் நிலையை விரைவாக கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகளுக்கு துரித நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
பகுதி மக்கள், நீர்தேக்கம் அதிகமுள்ள பகுதிகளில் மேலும் ஒரு மின் மோட்டார் அமைத்தால் நீர் வெளியேறும் வேகம் அதிகரிக்கும் எனக் கோரிக்கை முன்வைத்தனர். இதனை கவனத்தில் கொண்ட மேயர், கூடுதல் மோட்டார் அமைப்பு உள்ளிட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
எட்டையாபுரம் ஹவுசிங் போர்டில் நீர்தேக்கத்துக்கு விரைவு நடவடிக்கை – மேயர் நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி ஹௌசிங் போர்டு பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற நடவடிக்கைகள் தீவிரம் – ஒட்டப்பிடாரம் MLA சண்முகையா நேரில் பார்வை!!
அடுத்த
மருதூர் அணைக்கட்டில் நீர்வரத்து அதிகரிப்பு: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியர் இளம் பகவத் அறிவிப்பு!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026