தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளன. இதில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாகக் காணப்பட்ட எட்டையாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் மழைநீர் வெளியேற்றப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பகுதியில் வழிகால்கள் மூலமாகவும் மின் மோட்டார் உதவியாலும் நீர் வெளியேறி வருவதை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைநீர் நிலையை விரைவாக கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகளுக்கு துரித நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

பகுதி மக்கள், நீர்தேக்கம் அதிகமுள்ள பகுதிகளில் மேலும் ஒரு மின் மோட்டார் அமைத்தால் நீர் வெளியேறும் வேகம் அதிகரிக்கும் எனக் கோரிக்கை முன்வைத்தனர். இதனை கவனத்தில் கொண்ட மேயர், கூடுதல் மோட்டார் அமைப்பு உள்ளிட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.