தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில், வெங்கடேஸ்வரா டீ ஸ்டால் எதிரே அமைந்துள்ள ஹவுசிங் போர்டு ஐஎன்டியுசி ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் சரஸ்வதி பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் சங்கத்தின் தலைவர் பரமசிவன், செயலாளர் முருகராஜ், பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி, துணைத் தலைவர் முத்துராஜ், துணை செயலாளர் பாலகணேசன் உள்ளிட்டோர் தலைமையேற்றனர். மேலும் உறுப்பினர்களான முருகன், கணேசன், சரவணன், முருகேசன், ஈஸ்வரமூர்த்தி, விஸ்வநாதன், சிவசங்கர், இசக்கி பாண்டி, பொன் சிவசங்கர், சம்சுதீன், வெங்கடேஷ், விஜயகுமார், தங்கம், ஐயப்பன், எம்.பி. கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் பி. ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி 3-வது வார்டு திமுக கவுன்சிலர் ரெங்கசாமி, சங்கத்தின் சட்ட ஆலோசகர்கள் விஜயசுந்தர், பால் ஜோசப் (நோட்ரிக் பப்ளிக் – மத்திய அரசு), சதீஸ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பு செய்தனர்.

இறுதியாக, விழாவில் பங்கேற்ற அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டு சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.