தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன் முன்பு உள்ள சாலையில் நடைபெற்று வரும் வடிகால் தூர் வாரும் பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார் உடன் கலந்து கொண்டு ஆய்வில் இணைந்தனர்.

மேயர், பணிகள் விரைவாகவும் தரமாகவும் நிறைவேற்றப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.