பத்திரிக்கை உலகின் முடிசூடா மன்னர், தென்காசி கோபுரம் தந்த இரண்டாம் பராக்கிரம பாண்டியன் என்று போற்றப்படுபவர், தினத்தந்தி அதிபர் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 90வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

தூத்துக்குடி வ.உ.சி மார்க்கெட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தலைமையில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் உதயசூரியன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயகசமாடன், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார், தொழிலதிபர் பொன் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.