பத்திரிக்கை உலகின் முடிசூடா மன்னர், தென்காசி கோபுரம் தந்த இரண்டாம் பராக்கிரம பாண்டியன் என்று போற்றப்படுபவர், தினத்தந்தி அதிபர் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 90வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
தூத்துக்குடி வ.உ.சி மார்க்கெட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தலைமையில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் உதயசூரியன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயகசமாடன், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார், தொழிலதிபர் பொன் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகத்தின் சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழாவில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி மாரியப்பன் தலைமையில் மரியாதை!!
அடுத்த
பத்ம ஶ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் 89வது பிறந்தநாள் விழா – மேயர் தலைமையில் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026