தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் எதிரே அமைந்துள்ள காமராஜர் சிலை அருகில், பத்திரிகை உலகில் மறக்க முடியாத சாதனையாளர், தினத்தந்தி அதிபர், பத்ம ஶ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 89வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு. ஜெகன் பெரியசாமி அவர்கள் தலைமையில், அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த சிவந்தி ஆதித்தனார் அவர்களின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விழாவில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மற்றும் பகுதி செயலாளர்கள், மாநகர மாமன்ற உறுப்பினர்கள், வட்ட கழக செயலாளர்கள், கழக மூத்த முன்னோடிகள், கழக செயல்வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அவரின் நினைவுகளைப் போற்றினர்.