பத்திரிகை உலகின் முன்னோடியும், சமூக, கல்வி, விளையாட்டு துறைகளில் தொண்டாற்றிய பெருந்தலைவருமான பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (24.9.25) வீரபாண்டியபட்டினத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் பங்கேற்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அத்துடன் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், இ.ஆ.ப.,, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இவ்விழாவில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், சமூக அமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு, பத்திரிகை உலகின் “முடிசூடா மன்னன்” என்று போற்றப்படும் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவுகளைப் போற்றினர்.