பத்திரிகை உலகின் முன்னோடியும், சமூக, கல்வி, விளையாட்டு துறைகளில் தொண்டாற்றிய பெருந்தலைவருமான பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (24.9.25) வீரபாண்டியபட்டினத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் பங்கேற்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அத்துடன் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், இ.ஆ.ப.,, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இவ்விழாவில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், சமூக அமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு, பத்திரிகை உலகின் “முடிசூடா மன்னன்” என்று போற்றப்படும் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவுகளைப் போற்றினர்.
தூத்துக்குடி
வீரபாண்டியபட்டினத்தில் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் 90-வது பிறந்தநாள் விழா – அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பத்ம ஶ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் 89வது பிறந்தநாள் விழா – மேயர் தலைமையில் மரியாதை!!
அடுத்த
பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளில் நாம் இந்தியர் கட்சி சார்பில் மலர்மாலை மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026