தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் 7 நாள் சிறப்பு முகாம் முத்தையாபுரம் சாண்டி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.
முகாமை பள்ளி தலைமை ஆசிரியர் சர்மிளா ஜெனிதா தொடங்கி வைத்தார். சாண்டி கல்வி குழும துணைத் தலைவர் சாண்டி மற்றும் கல்வியியல் கல்லூரி முதல்வர் சத்தியசீலி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
முகாம் நாட்களில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் சமூக நலத்திட்டங்கள் நடத்தப்பட்டன. முத்தையாபுரம் 53-வது வார்டு கவுன்சிலர் முத்துவேல் தலைமையில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற தலைப்பில் ஊக்கமூட்டும் சொற்பொழிவு, சுற்றுப்புறத் தூய்மை பணிகள், வேளாண்மை சார்ந்த உயர்கல்வி வழிகாட்டுதல், மரம் நடுதல், சட்ட விழிப்புணர்வு, யோகா பயிற்சி, ஓவியம் மற்றும் கைவினைப் பயிற்சி, தெற்கு மண்டலம் நுண்உரம் செயலாக்க மையம் பார்வை, விளையாட்டு போட்டிகள், டிஜிட்டல் கல்வி மற்றும் சமூகவலைதள விழிப்புணர்வு ஆகியவை சிறப்பாக நடைபெற்றன.
மேலும், 'போதையில்லா தமிழகம்' என்ற தலைப்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி முத்தையாபுரம் உதவி காவல் ஆய்வாளர் வடிவேல் தலைமையில் நடந்தது.
முகாமின் நிறைவு விழாவில் தலைமை ஆசிரியர் சர்மிளா ஜெனிதா, முதுகலை ஆங்கில ஆசிரியர் சரவணன் மற்றும் முதல்வர் சத்தியசீலி சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பாராட்டுச் செய்திகளை வழங்கினர்.
7 நாள் முகாமை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராஜலட்சுமி மற்றும் உதவி திட்ட அலுவலர் கண்ணன் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப்பள்ளி – நாட்டு நலப்பணித்திட்டம் 7 நாள் முகாம் சிறப்பாக நிறைவு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி பாத்திமா நகர் மணல்மேட்டில் புனித பாத்திமா அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!!
அடுத்த
கார்கே விரைவில் குணமடைய தூத்துக்குடியில் சிறப்பு பூஜை!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026