தூத்துக்குடி பாத்திமா நகர் மணல்மேட்டின் பாதுகாவலியாக வணங்கப்படும் புனித பாத்திமா அன்னையின் ஆலய பெருவிழா மிகுந்த சிறப்புடன் ஆரம்பமானது.

அருட்திருவிழாவின் தொடக்க நிகழ்வாக (03.10.2025) வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருக்கொடியேற்றத்தில், மறைமாவட்ட பள்ளிகளின் கண்காணிப்பாளர் அருட்பணி பிராங்க்ளின் அவர்கள் கொடியேற்றி வைத்தார்.

இந்நிகழ்வில் தலைமை பங்குத்தந்தை ஜேசுதாசன், வகித்தார். மதுவிலக்கு சபை ஜெயந்தன், சென்ட் தாமஸ் பள்ளி முதல்வர் ஜேசுராஜா, அருட்பணி சுதர்சன் (இளையோர் பணியகம்), அருட்பணி பெஞ்சமின், அருட்பணி விமல்ஜன் (உயர் படிப்பகம்), அருட்பணி சில்வர் ஸ்டார் (கிறிஸ்துவ வாழ்வுரிமை இயக்கம்) உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வழிநடத்தினர்.

பெருவிழாவை முன்னிட்டு

நற்கருணை பணி : 05.10.2025, ஞாயிற்றுக்கிழமை

மாலை ஆராதனை : 12.10.2025, ஞாயிற்றுக்கிழமை

அன்னையின் பெருவிழா திருநாள் : 13.10.2025, திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சிகளை தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு இவோன் அம்புரோஸ் அவர்களின் திருப்பலி மற்றும் ஆன்மீக வழிநடத்தலுடன் சிறப்பாக நடத்தப்பட உள்ளது.

அழைப்பாளர் : அருட்பணி ஜேசுதாஸ் பர்னாந்து (பங்குத்தந்தை)
ஒழுங்கமைப்பு : அருட்பணி வின்சென்ட் (உதவி பங்குத்தந்தை)

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் –
அருட்சகோதரிகள், பங்கு பேரவையினர், ஊர் நலக்குழு, பங்கு இறைமக்கள் மற்றும் பாத்திமா நகர் மக்கள்.