அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் பெங்களூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் பூரண நலம் பெற்று மீண்டும் மக்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்பதற்காக, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் தலைமையில் போல் பேட்டை மாரியம்மன் கோவிலில் கார்கே அவர்களின் பெயரில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வடக்கு மண்டல தலைவர் சேகர், கிழக்கு மண்டல தலைவர் ஐசன் சில்வா, ஊடக பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், எஸ்.சி பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் பிரபாகரன், மாவட்ட செயலாளர்கள் கோபால், குமார முருகேசன், வார்டு தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.