தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிதம்பரநகர் பகுதியில் உள்ள சக்தி விநாயகர் இந்து வித்யாலயா சிபிஎஸ்சி மேல்நிலைப் பள்ளியில் “நமது வணக்கத்திற்குரிய மேயரும் எமது மாணவர்களும்” என்ற தலைப்பில் சிறப்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பொறுமையுடனும் பாராட்டத்தக்க வகையிலும் பதிலளித்தார்.

மாணவர்கள் நகர வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி, தூய்மை மற்றும் குடிமைப் பொறுப்பு குறித்து கேள்விகள் எழுப்பினர். மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள், நகரின் முன்னேற்ற பணிகள் குறித்து விரிவாக விளக்கி, மாணவர்கள் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.