தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில், போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி இறை வணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகியது. வரவேற்புரையாற்றிய தலைமை ஆசிரியர் கனகரத்தினமணி அவர்கள், மாணவர்கள் போதைப்பொருளிலிருந்து விலகி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தலைமை உரையாற்றிய மாவட்ட புகையிலை தடுப்பு அதிகாரி டாக்டர் வேணுகா அவர்கள், இளைஞர்கள் போதைப்பொருளால் சிக்கிக்கொள்ளாமல் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் என விழிப்புணர்வு அளித்தார்.

சிறப்புரையாற்றிய மாவட்ட சுகாதார நேர்முக உதவியாளர் பெரியசாமி அவர்கள், போதைப்பொருள் பழக்கத்தின் உடல் மற்றும் மன நல பாதிப்புகளை எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக வட்டார மருத்துவமில்லா மேற்பார்வையாளர் ஜோசப் மற்றும் மாப்பிள்ளையூரனி ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் முகமது ஆசிக் அரபி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளித்தனர்.

நன்றியுரையாற்றிய தேசிய மாணவர் படை ஆசிரியர் ஜுசஸ் ஆல்பன் அவர்கள், சமூகத்தில் விழிப்புணர்வு பரப்பும் மாணவர்களின் பங்கு முக்கியமானது எனக் கூறினார்.

மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சி, நாட்டுப்பண்புடன் நிறைவு பெற்றது.