தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆயுர்வேத மருத்துவ பிரிவு சார்பில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து அலுவலகத்தில் சிறப்பு சுகாதார முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் ஆயுர்வேத மருத்துவ அலுவலர் ஜான் மோசஸ் தலைமையில் மழைக்கால நோய்களை தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு ஆயுர்வேதா காய்ச்சல் தடுப்பு கசாயம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அருகிலுள்ள அங்கன்வாடி மையங்கள், நடுநிலைப்பள்ளி மற்றும் தபால் நிலையத்திலும் காய்ச்சல் தடுப்பு கசாயம் வழங்கி மக்கள் நலனுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.