தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் தன்னூத்து கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் கலையரங்க கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பொதுமக்களை சந்தித்து, கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவசுப்பிரமணியன், தாசன், துணை வட்டாச்சியர் மாரியம்மாள், கிராம நிர்வாக அலுவலர் சதீஸ்குமார், ஊராட்சி செயலர் பரமசிவன், கருங்குளம் ஒன்றிய செயலாளர் சுரேஷ் காந்தி, மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பேச்சிமுத்து, இளைஞரணி முருகேசன், கழக நிர்வாகிகள் KTC ராஜா, ஆண்டி, வெள்ளசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.