தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஆதிபராசக்தி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்காலிக வடிகால் அமைத்து மழைநீர் வெளியேற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைநீர் தேங்கும் பகுதிகளில் தற்காலிக வடிகால் அமைப்புகள் சிறப்பாக நடைபெறுகின்றனவா எனவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

மேலும், மழைக்காலத்திற்கு பிந்தைய காலங்களில் நிரந்தர வடிகால் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றும் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

இந்த ஆய்வில் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.