புதுக்கோட்டை சத்யா மஹாலில் தூத்துக்குடி மத்திய ஒன்றிய மாவட்ட பிரதிநிதி திரு.வெயில்ராஜ் அவர்களின் இல்ல திருமண விழா விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அவருடன் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி, நீண்ட நாள்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

திருமண விழாவில் அரசியல், சமூக துறையை சேர்ந்த பலரும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலர் கலந்துகொண்டு புதுமணத்தம்பதியருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.