சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற மற்றும் நல்வாழ்வு சங்கத்தினர் இன்று (23.09.2025) மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி அவர்களை சந்தித்தனர்.
அப்போது, மாநகராட்சி பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு செய்கை மொழி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்த வேண்டும் என சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
இதற்கு பதிலளித்த மேயர் ஜெகன் பெரியசாமி, “உங்கள் கோரிக்கையை நான் கவனமாக எடுத்துக்கொண்டுள்ளேன். வருங்காலங்களில் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு செய்கை மொழி விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து நிறைவேற்றித் தருகிறேன்” என்று உறுதி அளித்தார்.
இந்த சந்திப்பில், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ராமகிருஷ்ணன், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், அந்தோணி மார்ஷலின், சங்க பொது செயலாளர் மெய்கண்டன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
செவித்திறன் குறைவுடையோருக்கான செய்கை மொழி விழிப்புணர்வை ஏற்படுத்த உறுதி – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி நகர விடியல் பேருந்து 57 D – இன்று மட்டும் சேவை நிறுத்தம் : பொதுமக்கள் அவதி!!
அடுத்த
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அதிரடி உத்தரவால் அழகுமுத்து நகரில் மின்மாற்றி குறை உடனடியாக சரி செய்யப்பட்டது!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026