தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மாதா கோவில், கேம்-1, என்டிபிஎல் வழியாக புதிய துறைமுகம் வரை தினமும் இயங்கி வந்த நகர பேருந்து (விடியல் பேருந்து) 57 D இன்று (23.09.2025) மட்டும் திடீரென சேவை நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்தப் பேருந்தை நம்பி பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தினசரி பயணம் செய்து வந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சேவை நிறுத்தப்பட்டிருப்பது பயணிகளின் திட்டங்களை சீர்குலையச் செய்தது.
பள்ளி நேரம், அலுவலக நேரம் ஆகியவற்றில் மாற்றுப் போக்குவரத்து வசதி கிடைக்காததால் மக்கள் அவதியுற்றனர். தினசரி பயணிகளின் நம்பிக்கைக்குரிய இந்தப் பேருந்து சேவை இன்று மட்டும் நிறுத்தப்பட்டிருந்தாலும், அவசர தேவைகளுக்காக பயணம் செய்ய வேண்டிய பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற சேவைகள் திடீரென நிறுத்தப்படாமல் இருக்க, போக்குவரத்து துறையினர் நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி நகர விடியல் பேருந்து 57 D – இன்று மட்டும் சேவை நிறுத்தம் : பொதுமக்கள் அவதி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சண்முகபுரத்தில் பேவர் பிளாக் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் பணிகளை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு!!
அடுத்த
செவித்திறன் குறைவுடையோருக்கான செய்கை மொழி விழிப்புணர்வை ஏற்படுத்த உறுதி – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026