தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சண்முகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய்கள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் குறித்த தகவல்களை மாநகராட்சி பொறியாளர்களிடம் கேட்டறிந்து, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர்கள், திமுக கழக நிர்வாகிகள், உள்ளூர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.