தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சண்முகபுரம் பகுதியில் நடைபெற்று வரும் பேவர் பிளாக் சாலை பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், வட்ட கழக செயலாளர் பொன்ராஜ், மாமன்ற உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.