ஓட்டப்பிடாரம் தொகுதி, மாப்பிள்ளையூரணி கிராமம், அழகுமுத்து நகரில் நீண்ட நாட்களாக மின்மாற்றியில் ஏற்பட்ட உயர் மின்னழுத்தம் காரணமாக, வீடுகளில் உள்ள விலையுயர்ந்த மின்பொருட்கள் டிவி, பேன், மிக்ஸி உள்ளிட்டவை சேதமடைந்து மக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர்.

இந்நிலையில், பொதுமக்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு மரியாதைக்குரிய ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்களிடம் மனு அளித்தனர்.

அவர்களின் அதிரடி உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, நேற்று மின்மாற்றியில் புதிய வயர் மற்றும் தளவாட பொருட்களை மாற்றி குறைகள் முழுமையாக சரிசெய்யப்பட்டன.

இதனால் மக்கள் நீண்டநாள் ஏற்பட்ட சிரமத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கிய ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி,” என்று அழகுமுத்துநகர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.