தூத்துக்குடி மாவட்டம் தினந்தோறும் தொழில், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வெளியூர் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் (பழைய பேருந்து நிலையம்) வழியாக பலர் நகரின் பல பகுதிகளுக்கு பயணம் செய்கின்றனர்.
ஆனால், இங்கு பயணிகள் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக — குறிப்பாக குளியலறை அல்லது ஆடைமாற்ற வசதிகளைப் பயன்படுத்துவதற்கான அரசு (மாநகராட்சி ) அல்லது தனியார் வசதிகள் இல்லாததால் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
தனியார் விடுதிகளில் சிலர் குளித்து விட்டு ஆடைமாற்றம் செய்ய விரும்பினாலும், அதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இதனால் பயணிகள் பொருளாதார ரீதியாகவும் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
“முன்னதாக தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையத்தில் இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்தில் குளியல் மற்றும் ஆடைமாற்ற வசதிகள் இருந்தன. ஆனால் தற்போது அவை இல்லை. மற்ற மாவட்டங்களில் இவ்வசதிகள் மக்கள் நலனுக்காக சீராக இயங்கி வருகின்றன. ஆனால் தூத்துக்குடியில் மட்டும் இது இல்லாதது வருத்தம் அளிக்கிறது,” என பயணிகள் கூறுகின்றனர்.
இதனால், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் மற்றும் முக்கியப் பகுதிகளில் இலவசம் அல்லது குறைந்த கட்டணத்தில் குளியல் மற்றும் ஆடைமாற்ற வசதி ஏற்படுத்தி, வெளியூர் பயணிகள் பயன் பெறும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி
மற்ற மாவட்டங்களில் உள்ள வசதி தூத்துக்குடியில் இல்லை – பயணிகள் விரக்தி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஓட்டப்பிடாரம் தொகுதியில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார் எம்.சி.சண்முகையா எம்எல்ஏ!!
அடுத்த
ஓட்டப்பிடாரம் தொகுதியில் கல்வி மற்றும் பொதுமக்கள் நலனைக் குறிவைத்து பல்வேறு மேம்பாட்டு பணிகள் தொடக்கம்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026