தூத்துக்குடி மாநகராட்சி 3-வது வார்டு கவுன்சிலர், தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் மற்றும் மாநகராட்சி கணக்குக் குழு தலைவர் ரெங்கசாமி, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை திருநாளை முன்னிட்டு மக்களுக்கும், திமுக உறுப்பினர்களுக்கும், தொழிலாளர்களுக்கும், வணிகத்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில்,
"அறிவுத்தெய்வமான சரஸ்வதி தேவியின் அருள் அனைவருக்கும் கல்வி, அறிவு, புத்திசாலித்தனம் அளிக்கட்டும். ஆயுத பூஜையை முன்னிட்டு தொழில்கள் வளர்ச்சி பெறட்டும். ஒற்றுமை, அன்பு, சமாதானம் நிலைத்து நல்வாழ்வு கிட்டட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடி மக்களிடையே இந்த நல்வாழ்த்துச் செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.