தூத்துக்குடி இன்று நாடு முழுவதும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி வழக்கறிஞர் அலுவலகத்தில் வக்கீல் ரமேஷ் பாண்டியன் தலைமையில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை சிறப்பாக நடைபெற்றது.

அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் அனைவரும் கலந்துகொண்டு பூஜை நிகழ்வில் பங்கேற்று தெய்வ அருளைப் பெற்றனர். வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் தம்முடைய அலுவலகத்தில் பக்தி உணர்வோடு பூஜை நடத்தி, சக ஊழியர்களுடன் ஆனந்தமாக கொண்டாடினார்.

சரஸ்வதி தேவியின் அருளால் அறிவும் கல்வியும் வளர வேண்டும் என்பதற்காகவும், தொழில் வளர்ச்சி மற்றும் நலம் காக்கும் விதமாகவும் இந்த விழா சிறப்பாக நடத்தப்பட்டது.