தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைந்துள்ள கரிசல்காட்டு இலக்கியத்தின் முன்னோடியும், சிறந்த எழுத்தாளருமான கி. ராஜநாராயணன் அவர்களின் நினைவரங்கத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. நேரில் பார்வையிட்டார்.
அப்போது, எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களின் படைப்புகள், புகைப்படங்கள் உள்ளிட்ட நினைவுச் சின்னங்களைப் பார்வையிட்ட அவர், மின்னணு நூலகத்தில் உள்ள பார்வையாளர்கள் பதிவேட்டில் தனது நினைவுக் குறிப்பை பதிவு செய்தார்.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கா.கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி, தமிழ்க் கரிசல் மண்ணின் எழுத்துப் பாரம்பரியத்திற்கும், கி.ராஜநாராயணன் அவர்களின் இலக்கியச் செல்வத்திற்கும் மரியாதை செலுத்தும் நினைவாக அமைந்தது.
தூத்துக்குடி
கரிசல்காட்டு எழுத்தின் பெருமைமிகு நினைவு — கி.ராஜநாராயணன் நினைவரங்கத்தை பார்வையிட்ட கனிமொழி கருணாநிதி எம்.பி.!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“முதலாளிக்கு நான் தான் சிறந்த அடிமை” என காட்டிக்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி – S.I.Rக்கு எதிராக தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
எட்டையாபுரத்தில் பாரதியார் பிறந்த வீடு – பழமை மாறாமல் புதுப்பிப்பு பணிகள் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026