எட்டையாபுரத்தில் நடைபெற்று வரும் பாரதியார் பிறந்த வீட்டை அதன் பழமையான அழகை காத்து புதுப்பிக்கும் பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V. மார்கண்டேயன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக விளக்கம் பெற்று, பணிகள் வேகமாகவும் தரமாகவும் நிறைவேற்றப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் எட்டையாபுரம் வட்டாட்சியர் சுபா, தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன், பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், துணைத் தலைவர் கதிர்வேல், மாவட்ட மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், இளைஞர், மாணவர், மகளிர் அணியினரும் கலந்து கொண்டனர்.