தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியின் இனிகோ நகர் பகுதியில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில், வால்டர் அவர்களின் இல்லம் பெரும் சேதம் அடைந்தது.

இந்த தகவலை அறிந்த உடனே, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன் சம்பவ இடத்துக்கு சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

வீட்டு சேதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உடனடி நிவாரண உதவிகள் கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அரசு எப்போதும் மக்களின் பக்கமே இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.